May 11

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு வார நிகழ்வு!

Posted by admin . Filed under Featured | Comments Off

அன்பான தமிழ் மக்களே! தமிழின வரலாற்றுப் பெருந்துயரான முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் இறுதிக் கணங்கள்வரை அங்கு நின்று அனைத்து துயரங்களையும் நேரில் கண்டு உயிர் தப்பி வந்தவர்கள் அங்கு நடந்தேறிய கொடூரப் படுகொலைகளின் துயர அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவுள்ளனர். அத்துடன் „கரிகாலன் ஈற்றெடுப்பு“ என்ற நூலும், தமிழீழ இசைக்குழுவினர் முள்ளிவாய்க்காலில் இருந்து இறுதியாகப் பாடிய பாடல்களை உள்ளடக்கிய வல்லமை தரும் மாவீரம், தேனிசை செல்லப்பாவின் பாடல்கள் அடங்கிய மனசெல்லாம் மாவீரம், புலம்பெயர் இளையோரால் பாடப்பட்ட மாவீரர் புகழ் ஆகிய இறுவெட்டுக்களும் [...]

May 7

மே 18 இனம் அழிப்பு நினைவெழுச்சி நாள் 2012 – ஜெர்மனி

Posted by admin . Filed under Featured | Comments Off

முள்ளிவாய்க்காலில் மே மாதம் 2009 ம் ஆண்டு 18 ம் திகதி உலகிலேயே முதல் முறையாக பாரிய அளவில், எம் தமிழினம் இனம் எந்த வித சாட்சியங்களும் இல்லாமல் துடைத்தழிக்கபட்டு முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட ஈழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் நினவு கொள்ளப்படும் நாள்.

May 5

தொண்டனாக வாழ்ந்து மறைந்த நாட்டுப்பற்றாளர் மா. கனகரெத்தினம்!

Posted by admin . Filed under Featured | Comments Off

அமரர் மா. கனகரெத்தினம் அதிபர், தான் வாழ்ந்த 38 வயதுக்குள் தன் மேலதிகாரிகள், தன்னோடொத்தவர்கள், தன்னிலும் இளையோர் ஆகிய முத்திறத்தாரையும் ஒரு சேரக் கவர்ந்துள்ள தனிச்சிறப்புப் பெற்றவர். தன் நல்லெண்ணத்தாலும், ஆளுமையினாலும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவராலும் அவர் விரும்பப்பட்டார்.

March 8

சிங்கள அரசாங்கத்திற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றபட உள்ளது!

Posted by admin . Filed under Uncategorized | Comments Off

ஐநா மனித உரிமை கூட்டத்தொடரில் 27 ற்கும் மேற்பட்ட சர்வதேச நாடுகள் சிங்கள அரசாங்கத்திற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றபட உள்ளது. இந்தியா சைனா ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகள் இலங்கை அரசுக்கு ஆதரவளிக்கும் நிலையில் தமிழ் நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் இன மத வேறுபாடுகளை கடந்து ஈழத்தமிழ் மக்களின் வாழ்வுரிமைக்கான நிரந்தர தீர்வான தமிழீழத்தை பெற்றெடுக்க இந்திய மத்திய அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும். போர் குற்றம் மற்றும் இன அழிப்பினை மேற்கொண்ட சிங்கள அரசாங்கத்திர்ற்கு இந்த [...]

December 18

மக்களின் ஆணைக்கு கூட்டமைப்பு மதிப்பளிக்கவேண்டும்.

Posted by admin . Filed under Uncategorized | No Comments

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களில் பலர் தமிழ்த்தேசியத்தின் இலக்கை விட்டு நகர்ந்து செல்கின்றார்கள் என்றும், திட்டமிட்டுப் படுகுழியில் தமிழர்கள் உணர்வை அழிக்கப் போகின்றார்கள் என்றும், இதனால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களை அகற்றவேண்டும் என்ற கோரிக்கையை இதற்கு முந்திய கட்டுரையில் காட்டமாகவே வெளியிட்டிருந்தேன்.

December 15

தமிழ் தேசியத்தை சிதைக்கும் சம்பந்தன் குழுவினர்?

Posted by admin . Filed under Uncategorized | No Comments

நீண்ட இடைவெளியின் பின்னர் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறும்  வேதாள மதி!  இனி விசயத்திற்கு வருவோம்!  தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் அண்மைக்கால அமெரிக்க சுற்றுலா தமிழ் மக்களுக்கு சார்பாக ‘வெட்டிச் சரிக்கும்’ என எதிர்பார்த்தவர்களுக்கு மிகுந்த  ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எமாற்றங்களையும் கடந்து துரோகத்தனம் தாண்டவமாடுவதை காணக்கூடியதாக இருப்பது கவலைக்குரியதாகும்.

August 19

இந்து மயானத்துக்குள் விபச்சாரம்!! நடவடிக்கை எடுக்குமா திருகோணமலை நகரசபை?

Posted by admin . Filed under Uncategorized | No Comments

திருகோணமலை நகரில் அமைந்துள்ள இந்து மயானத்துக்குள் விபச்சாரம் இடம்பெறுவதாக கொழும்பிலிருந்து வெளிவரும் ‘இருக்கிறம்’ பத்திரிகை பட ஆதாரங்களுடன் தகவல்களை வெளியிட்டுள்ளது.

November 4

வடக்கின் திட்டமிட்ட குடியேற்றங்கள் மீண்டும் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் – பேராயர் ரஞ்சித்

Posted by admin . Filed under Uncategorized | No Comments

போருக்கு பின்னர் இலங்கையின் சமாதானம் நிலைநாட்டப்படுவது அவசியம் என பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னால் இன்று சாட்சியமளித்த அவர் இனங்களுக்கு இடையில் நல்லெண்ணம் சந்தேகமின்மை மற்றும் உறவுகளை கட்டியெழுப்புவதற்கு அரசியல் தீர்வு ஒன்று அவசியம் எனக்குறிப்பிட்டுள்ளார்.

November 1

சிறிலங்கா இராணுவத்தில் புதிய புலனாய்வுப் பிரிவு

Posted by admin . Filed under Uncategorized | No Comments

சிறிலங்கா இராணுவம் புதியதொரு புலனாய்வுப் பிரிவை உருவாக்கியுள்ளது. ஐந்தாவது இராணுவப் புலனாய்வுப் பிரிவு என்ற பெயரில் இது உருவாக்கப்பட்டுள்ளது.

November 1

தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் அறப்போரும் -கனக கடாட்சம்

Posted by admin . Filed under Uncategorized | No Comments

அண்மையில் வடக்கு மாகாண அபிவிருத்திக் கூட்டம் வவுனியாவில் நடைபெற்றபோது ஜனாதிபதியும் கலந்து கொண்டு ‘தமிழ்க்கட்சிகள் ஒற்றுமைப்படும் பட்சத்தில் தீர்வினை சமர்ப்பிக்க ஆயத்தமாக இருப்பதாக‘ கருத்துரை வெளியிட்டார். இது ஒருபுறம் ‘மலடியை பிடித்து பிள்ளைப்பெறச் சொல்லும்‘ நகைப்பினை ஒத்த கருத்தாக இருந்தாலும், ஈழத்தமிழர்களையும் தலைமைகளையும் திசைமாற்றும் அல்லது தடம்மாற்றும் கருத்தாக ஜனாதிபதியின் உரையை எடுத்துக்கொள்ளலாம்.